.
********************************************************************************************
கதை
கதையாம் காரணமாம்
– ராமாயணத் தொடர்
பகுதி 1
விநாயகப்
பெருமான்
அருளால்
இப்போது
தொடங்கும்
தொடர்
எந்தவிதத்
தடங்கலும் இல்லாமல்
தொடரப்
பிரார்த்திக்கிறேன்."அரியும்
சிவனும்
ஒண்ணு"
பதிவில்
குமரன், ராகவன்,
இ.கொ.,
திராச
எல்லாரும்
எழுதி
இருக்கும்
பின்னூட்டங்களுக்குப்
பதிலோ, அல்லது
அந்தப்
பதிவின்
தொடரோ
இப்போது கொஞ்ச
நாட்களுக்கு
இல்லை.
இதுவும், ஏப்ரல்
2-ம்
தேதியில்
இருந்து 10
அல்லது
11-ம்
தேதி வரையில்
போட முடியாது.
அது வரை
போடுவேன்,
வந்தப்புறம்
முடிக்கணும்னு
ஒரு எண்ணம்,
இறைவன்
சித்தம்
எப்படியோ
அப்படி!
இது
பல நாட்களாய்
உருப்போட்டு
வைத்த ஒரு விஷயம்,
அனைவரும்
அறிந்த ஒன்றே,
என்றாலும்,
இது
நான் படித்த
ஒரு ஆங்கில
மொழி
பெயர்ப்பை அடிப்படையாகக்
கொண்டே
பெரும்பாலும் எழுதப்
போகிறேன்.
அந்தப்
புத்தகமும்
இப்போ கைவசம்
இங்கே இல்லை.
ஒரு வருஷம்
முன்னால் எழுதி
வைத்த
குறிப்புக்களின்
அடிப்படையிலேயே
எழுதப்
போகிறேன்.
எழுதப் போவது ராமாயணத்
தொடர்.
வால்மீகி
ராமாயணம்
தான், ஆனால்
ஆர்ஷியா
சத்தார்
என்னும்
பெண்மணி
இந்தத்
தொடரை
ஆங்கிலத்தில்
மொழி மாற்றம்
செய்திருக்கிறார்.
கிட்டத்
தட்டப் பத்து வருடங்கள்
இதற்காக
உழைத்துவிட்டுப்
பின்னரே
இதில் இறங்கி
இருக்கிறார்.
மொழி பெயர்ப்புக்கும்,மொழி
மாற்றத்துக்கும்
வித்தியாசம்
இருக்கிறது
என்றே
நினைக்கிறேன். ஆகவே
என்னைப்
பொறுத்த
அளவில்
வால்மீகி ராமாயணத்தை
அடிப்படையாகக்
கொண்ட மொழி
மாற்றமே
இது.
ஆர்ஷியா
சத்தார்
பற்றிய ஒரு
குறிப்பு இப்போது
காணலாம்.
1960-ம்
வருஷம்
பிறந்த
இவர்
தெற்காசிய
மொழிகளிலும்,
நாகரீகத்திலும்
ஆராய்ச்சி
செய்து
அதற்கான
முனைவர்
பட்டம்
ஷிகாகோ
பல்கலைக்
கழகத்தில் 1990-ம்
ஆண்டில்
பெற்றிருக்கிறார்.வடமொழி எனப்படும்
சம்ஸ்கிருதத்தில்
உள்ள
"கதாசரிதசாகரா"
மற்றும்
வால்மீகி
ராமாயணத்தை
இவர் ஆங்கிலத்தில்
மொழி
பெயர்த்து
உள்ளது குறிப்பிடத்
தக்கது.
பெங்குவின்
பதிப்பகத்தால் வெளியிடப்ப்பட்ட
இவரின் இந்த
மொழிபெயர்ப்பு
நூல்கள்
டைம்ஸ் ஆப் இந்தியா,இல்லஸ்ட்ரேட்டட்
வீக்லி போன்ற
பத்திரிகைகளால்
விமரிசிக்கப்
பட்டுள்ளது. இதற்காக
இவர்
உழைத்திருக்கும்
உழைப்புக் குறைத்து
மதிப்பிடக்
கூடிய
ஒன்றல்ல.
பழங்கால
மொழியின்
பேச்சு
வழக்குத்
தெரிந்து
கொள்ள
வேண்டும்.
நாகரீகங்கள்,
பழக்க வழக்கங்கள்
தெரிய
வேண்டும்.
அப்போது தான்
அந்தக்
குறிப்பிட்ட
நூலின் உண்மையான
உள் அர்த்தங்களைப்
புரிந்து
கொள்ள
முடியும். வால்மீகி
ராமாயணத்தின்
மூலத்தைத்
தேடி அலைந்த
இவருக்குக்
குஜராத்தின்
எம்.எஸ். பல்கலைக்கழகத்தில்
அதன் பிரதி
ஒன்று கிடைத்தது.
தான்
கேட்டு
அறிந்த
ராமாயணக்கதைக்கும்
இந்த
வால்மீகி
ராமாயண
மூலப்பிரதியிலும்
பல வேற்றுமைகள்
இருப்பதை
அறிந்து
கொண்டார்
ஆர்ஷியா சத்தார் அவர்கள்.
ஆகவே மேலும்
பல
பிரதிகளைத்
தேடி அலைந்து
ஸ்ரீஹரிப்ரசாத்
சாஸ்திரியின்
மொழி பெயர்ப்பு,
என்.
ரகுநாதன்
அவர்களின்
ராமாயணம்,
ராபர்ட்
கோல்ட்மேன்
மற்றும்
அவரின்
மற்ற
நண்பர்களால்
மொழிபெயர்ப்புச்
செய்யப்பட்டது,
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின்
"சக்கரவர்த்தித்
திருமகன்",
ஆர்.கே,
நாராயணனின்
ராமாயணக் கதை,
பி.லால்,
கமலா
சுப்ரமணியன்,
வில்லியம்
பக்
போன்றவர்களின்
புத்தகம் போன்ற
பல புத்தகங்களையும்
ஆராய்ந்தார்.
பின்னர் வால்மீகியின்
ராமாயண மூலப்
பிரதியை
ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தார்.
ஒரே
புத்தகமாய்
வந்துள்ள இது
கிட்டத் தட்ட 1000
பக்கங்களுக்கு
மேல் உள்ளது.
சரளமான
மொழிபெயர்ப்பு.
கதையின்
மையக்
கருத்தை
நன்கு உள்வாங்கிக்
கொண்டு
கடைசியில்
கதையைப் பற்றிய
தன்
கருத்தையும்
சொல்லி
இருக்கிறார்.அது
கடைசியில்
வரும்.
இப்போது வால்மீகி
பற்றிய சிறு
குறிப்பு.
பின்னர்
ராமாயணம்,
வழக்கம்போல்
உத்தரகாண்டத்தில்
லவ, குசர்கள்
சொல்லுவது
போலவே தொடங்கும்.

வால்மீகி
முனிவர்
நாரதரால்
ஆசீர்வதிக்கப்
படும்
முன்னர் ஒரு கொள்ளைக்காரனாய்த்
திகழ்ந்தார்
என அனைவருமே
அறிந்திருக்கலாம்.
காட்டில்
செல்லும் வழிப்போக்கர்களைக்
கொள்ளை
அடித்தும்,
கொன்றும்
அவர்களின்
பொருட்களைக்
கொண்டு
வாழ்க்கை
நடத்தி வந்த
இவரை, நாரதர்
ஒரு முறை
சந்திக்க
நேர்ந்தது.
நாரதர்
அவரிடம்
அவர்
செய்யும்
கொலை,கொள்ளை
போன்றவற்றைச்
செய்யக்
கூடாது எனப் போதிக்க
இவரோ, என் பெரிய
குடும்பத்தைக்
காப்பாற்றவே
நான் இம்மாதிரியான
காரியங்களில்
இறங்குகிறேன்
எனச் சொல்கின்றார்.
நாரதர்
அவரிடம்
அப்போது "வலியா,
நீ
செய்யும்
இந்த துஷ்கிருத்தியங்களின்
பலனை நீ
மட்டுமே அனுபவிக்க
நேரிடும்.
எங்கே, இப்போது
உன் குடும்பத்தினரிடம்
சென்று இதன்
துர்ப்பலன்களை
அவர்கள்
ஏற்றுக்
கொள்ளுவார்களா
எனக் கேட்டு
வா!" என்று சொல்லி
அனுப்ப, வலியனாக
இருந்த
வால்மீகியும்
தன் குடும்பத்து உறுப்பினர்கள்
ஒவ்வொருவராய்ச்
சென்று, "என்
பாவத்தை
ஏற்றுக் கொள்,"
என
வேண்டிக் கேட்க,
குடும்பத்துக்
கடைசி
உறுப்பினர்
வரை யாருமே
அவர் பாவத்தை
ஏற்க
மறுக்கவே,
மனம்
வருந்திய
வலியன்
திரும்ப
நாரதரிடம் வருகிறான்.
நாரதர் மூலம்
அவனுக்கு
வித்யை
கற்றுக்
கொள்ள
நேர்ந்ததுடன்,
ஒரு
முனிவராகவும்
உருவெடுக்கிறான்.
ஒருநாள் அவருக்கு,
"மனிதர்களில்
சர்வ
உத்தமனாகவும்,
யாராலும்
போற்றப் படக்
கூடியவனாகவும் யாரும்
இருக்கிறார்களா?
இருந்தால்
அவன் யார்?"
என்ற
கேள்வி
தோன்றியது.
உடனேயே
நாரதரிடம்
சென்று தன்
இந்தச்
சந்தேகத்தைக்
கேட்கிறார்.
நாரதரும்
அவருக்கு ஸ்ரீராமரின்
கதையைச்
சொல்லி, இவர் தான்
மனிதர்களிலேயே
உத்தமரும்,
யாவரும்
போற்றத்
தக்கவரும்
ஆவார்." எனச்
சொல்கின்றார்.
பின்னர் தன்
மாலைக்
கடன்களில்
மூழ்கிய
வால்மீகி
கண்களில் ஒரு
வேடன் இரு
கிரெளஞ்சப்
பட்சிகளைத்
துரத்தும்
காட்சியும்,
வேடனால்
ஒரு
கிரெளஞ்சப்
பட்சி
அடித்து வீழ்த்தப்
பட்டதையும்,
தப்பிய
மற்றதின் அழுகுரலும்
படுகிறது.
வேடனைக்
குறித்து அவர்
கூறிய
சொற்கள் ஒரு
இனிமையான அதே
சமயம் சோகம்
ததும்பிய
சந்தத்தோடு
கூடிய பாடலாக
அமைந்தது.
திகைத்துப்
போன வால்மீகி செய்வதறியாது
திகைக்க
அவருக்கு
நாரதரும்,
பிரம்மாவும்
ஆசி கூறி
இந்தப் பாடலை
முதலாக
வைத்து
ராமனின்
கதையை பாடச்
சொல்லி
உத்தரவு
பிறப்பிக்கின்றனர்.
இது ஒரு
இதிகாசமாக இருக்கும்
எனவும்
சொல்லப்
படுகிறது.
இதிகாசம்
என்றால் அதை
எழுதுபவர்களும்
அந்தக்
குறிப்பிட்ட
இதிகாசக்
கதையில் ஒரு
பாத்திரமாக
இருப்பார்கள்
என்று நம்
நண்பர் திரு திராச
அவர்கள்
சொன்னார்கள்.
இந்த
ராமாயணக் கதையில்
வால்மீகியும்
ஒரு
பாத்திரமே!
இனி நாளை
வால்மீகி
ஆசிரமம்
செல்வோமா?
Chapter 2
இடம்
வால்மீகி
ஆசிரமம்.
சிந்தனையில்
இருந்த வால்மீகிக்கு
ராமன்
இன்னும்
அரசாண்டு கொண்டிருப்பதும்,
அவனுடைய
நல்லாட்சி
பற்றியும்
நாரதர் எடுத்து
உரைத்தது
நினைவில் இருந்தது.
இப்படிப்
பட்ட ஒரு
உயர்ந்த
மனிதனின்
சரித்திரத்தைத்தான்
சாட்சியாகவும் இருந்து
கொண்டு எழுத
நேர்ந்தது
பற்றி அவர் மனமகிழ்ச்சி
அடைந்தார்.
காவியம்
இயற்றத்
தீர்மானம்
செய்த
வால்மீகிக்கு
அதுவரை நடந்த
நிகழ்வுகளும்,
பேசப்
பட்ட
சொற்களும்,
அழுத
அழுகைகளும்,
செய்த
சபதங்களும்,
வாங்கிய
வரங்களும்,
நிறைவேற்றப்
பட்ட பிரதிக்ஞைகளும்,
நடந்த
நடையும், செய்த
பிரயாணங்களும்
மனதில் வந்து
அலைகடலில்,
மோதும்
அலைகள் போல
மோத
ஆரம்பித்தன.
அதே சமயம் இனி
என்ன நடக்கப்
போகிறது, என்ற
உள்ளுணர்வாலேயும்
உந்தப்
பட்டார்.
எழும்பியது
ஒரு அமர
காவியம்!
சூரிய, சந்திரர் உள்ளவரையும்,
நட்சத்திரங்கள்
ஜொலிக்கும்
வரையும், கடல் மணல்
உள்ளவரையும்,
இப்பூவுலகில்
மக்கள்
வசிக்கும்
வரையும் பேசப்
படப் போகும்,
அனைவராலும்
விவாதிக்கப் படப்
போகும் ஒரு
மகத்தான
எழுத்தாக்கம்
எழும்பி
நின்றது.
ஆறு
காண்டங்களில்,
500 சர்க்கங்கள்
எனப்படும்
அத்தியாயங்களில்,
24,000 ஸ்லோகங்கள்
எழுதப்
பட்டதாய்ச் சொல்லப்
படுகிறது. இனி
நடக்கப்
போவதை உத்தரகாண்டமாக
இயற்றினார்.
எல்லாம்
முடிந்தது. இனி
மக்களுக்கு
இதை
எடுத்துச்
சொல்லும் பேறு
பெற்றவர்
யார்? தகுதியான
நபர்கள் யார்?
சிந்தித்த
வால்மீகியை
வந்து
வணங்கினார்கள்
இரு
இளைஞர்கள்.
லவன், குசன்,
என்ற
பெயர் பெற்ற இரு
இளைஞர்களும்
வால்மீகியின்
சிஷ்யர்கள்
தான்.
என்றாலும்
இந்த மகத்தான காவியத்தின்
முக்கிய
கதாபாத்திரங்களும்
அவர்களே, ஆனாலும்
அவர்கள் அதை
அச்சமயம் அறியமாட்டார்கள்.
தங்கள்
குருவை
வணங்கிய இரு
இளைஞர்களுக்கும்,
இந்த
ஒப்பற்ற
காவியம்
கற்பிக்கப்
பட்டது.
பிறவியிலேயே
இனிமையான குரல்வளம்
பெற்றிருந்த
இரு
இளைஞர்களும் அந்தக்
காவியத்தை
தங்கள்
இனிமையான
குரலில்
இசைக்க
ஆரம்பித்தனர்.
ரிஷிகளும்,
முனிவர்களும்,
நல்லோரும்
கூடி
இருக்கும்
இடங்களில்
அந்தக்
காவியத்தைப்
பாடலாகப் பாடிக்
கொண்டு இரு
இளைஞர்களும்
சென்ற வழியில்,
ஸ்ரீராமரின்
அசுவமேத
யாகம் நடந்து கொண்டிருந்த
இடத்தை
அடைந்தனர்.
யாகம்
நடக்கும்போது
ஏற்படும்
சிறு இடைவேளைகளில்
இச்சிறுவர்கள்
பாடும்
ராமாயணப்
பாடல்களைக்
கேட்டறிந்த
ரிஷிகள், முனிவர்களோடு,
பொது
மக்களும்
அந்தச்
சிறுவர்களை
வாழ்த்திப்
பரிசுகளை
அளிக்கின்றனர். செய்தி
பரவி, நகரத்
தெருக்களில்
இருந்து, மெல்ல,
மெல்ல
அரண்மனையைச்
சென்றடைந்தது. ஸ்ரீராமரின்
செவிகளில் இந்தச்
செய்தி
விழுந்ததும்,
இளைஞர்களை
அரண்மனைக்கு வரவழைக்கின்றார்.
இளைஞர்கள்
பாட ஆரம்பித்ததும்,
கொஞ்சம்
கொஞ்சமாகத்
தன் வயம்
இழந்த ஸ்ரீராமர்
சிம்மாசனத்தில்
இருந்து கீழே
இறங்கி மற்ற
சபையோர்களுடன்
சேர்ந்து அமர்ந்து
அந்தக்
காவியத்தைக்
கேட்கலானார்.
இந்த
இடத்தில்
துளசி
ராமாயணம்,
மற்றச்
சில
ஹிந்தியில்
எழுதப்
பட்டிருக்கும்
ராமாயணக்
கதையில் லவ,
குசர்கள்,
ஸ்ரீராமரின்
அசுவமேதக்
குதிரையைப்
பிடித்துக்
கட்டி விட்டு,
அதை
விடுவிக்க
வந்த ராம
பரிவாரங்களைத்
தோற்கடித்ததாயும்,
பின்னர்
சீதை வந்து
நேரில்
பார்த்துவிட்டுத்
தன் பதியின்
சகோதரர்களே
என அறிந்து
கொண்டு, லவ, குசர்களிடம்
அதைத்
தெரிவித்ததாயும்,
ஸ்ரீராமருடனேயும்,
லவ,
குசர்கள்
சண்டை போடத்
தயாராக
இருந்ததாயும்
வரும்.
அதற்குப் பின்னரே
அவர்கள்
அசுவமேத
யாகத்தில்
கலந்து
கொண்டு
ராமாயணம்
பாடச்
செல்லுவார்கள். ஆனால்
வால்மீகி
ராமாயணத்தில்
ராமரின்
கடைசித்
தம்பியான
சத்ருக்கனன்
மட்டுமே லவ,
குசர்கள்
பிறந்த
சமயத்திலும்,
அதற்குப்
பனிரெண்டு
வருடங்கள்
பின்னால் அவர்கள் ராமாயணத்தை
வால்மீகி
மூலம்
கற்றுப்
பாடிப்
பயிற்சி
செய்து
கொண்டிருந்த
போதும்
வால்மீகி
ஆசிரமத்தில்
தற்செயலாகத்
தங்குகிறான்.
அவன் ஒருவனுக்கு
மட்டுமே
ஸ்ரீராமருக்கு
இரட்டைக்
குழந்தைகள்
பிறந்த
விபரம் தெரிய
வருகிறது,
என்றாலும்
அவன் கடைசி வரை
அது பற்றிப்
பேசுவதில்லை.
வால்மீகியும்
ராமனை ஒரு
அவதார
புருஷன்
என்று
எந்த
இடத்திலும்
சொல்லவில்லை,
என்பதும்
கவனிக்கத்
தக்கது. ஆனால்
வால்மீகி ராமனை
ஒரு சாதாரண,
ஆசா
பாசங்கள்
நிறைந்த
மனிதனாய்க்
காணவில்லை.
கட்டுப்பாடுகள் நிறைந்த
ஒழுக்க சீலன்
என்றும்
எண்ணவில்லை. மாறாக
"மனிதருள்
மாணிக்கம்"
என்றும்
கிடைத்தற்கரிய
அரிய மனிதன்
என்றும்
சொல்கின்றார்.
ஒரு
முன்மாதிரியான
மகன், சகோதரன்,
நண்பன்,
கணவன்,
இவை
எல்லாவற்றுக்கும்
மேல்
குடிமக்களைத்
தன் மக்கள்
போல் எண்ணும் ஒரு
ஒப்பற்ற
அரசன். தன்
கடமையைச்
செய்வதற்காகவும்,
தன்
குடிமக்களைத்
திருப்தி செய்வதற்காகவும்
எந்த விதமான
ஒப்பற்ற தியாகத்தையும்
செய்யத்
தயாராய்
இருந்தவன்,
தன் அன்பு
மனைவியைக்
கூட. அதை நாளை
காண்போமா?

பி.கு:
முதன் முதல்
நாரதர்
வால்மீகிக்குச்
சொன்ன
"சம்க்ஷிப்த ராமாயணம்"
தவிர, வால்மீகி
எழுதிய
ராமாயணத்தின்
மூலம் தவிர,
நாம்
அறிந்தவை,
கம்ப ராமாயணம்
தமிழில்
என்றாலும்
இது தவிர,
துளசி
ராமாயணம்,
ஆனந்த
ராமாயணம்,
அத்யாத்ம ராமாயணம்,
அத்புத
ராமாயணம்,
அமல
ராமாயணம்,
ரகு
வம்சம் உட்பட
பல
ராமாயணங்கள் இருக்கின்றன.
சங்க
காலத்திலும்
பழைய ராமாயணம்
ஒன்று
இருந்திருக்கிறது.
இது தவிர,
தமிழ்க்காப்பியங்கள்
ஆன
சிலப்பதிகாரம்,
மணிமேகலையும்
ராமாயணம்
பற்றிக்
குறிப்பிடுகிறது.
அருணகிரிநாதரும்
தன் பங்குக்கு
ஒரு ராமாயணம்
எழுதி
இருக்கிறார். முடிந்த
வரை சில
வரிகள் கம்ப
ராமாயணத்தில்
இருந்தும்,
அருணகிரிநாதரின்
ராமாயணத்தில் இருந்தும்
குறிப்பிடப்
படும். ஆனால்
கம்பரும் சரி,
அருணகிரியாரும்
சரி ராமரை ஒரு அவதாரமாகவே
வர்ணிக்கிறார்கள்.
படிப்பவர்கள்
அனைவரும்
உங்கள்
கருத்துப்
படி எடுத்துக்
கொள்ளலாம்.
கதை கதையாம்
காரணமாம்
என்ற
தலைப்புக் கொடுத்ததுக்கும்
காரணம்
இருக்கிறது.
காரணம்
இல்லையேல்
காரியம் இல்லை
என்பதை
நிரூபிக்கும்
ராமாயணக் கதை
அதை எடுத்துச்
சொல்லும் என
நம்புகிறேன்.
Chapter 3
தான்
பெற்ற
மகன்களே தன்
முன்னால்
வந்து தன் கதையையே
சொல்லுவதை
ராமர் அறிந்திருக்கவில்லை,
என்பதே
வால்மீகி
ராமாயணத்தின்
மூலம் நாம்
காண்பது. கம்ப ராமாயணத்தில்
கம்பர்
ராமாயணம்
எழுதும்போது
அவரை ஒரு
அவதார
புருஷனாகவே
நினைத்துக் கடவுளருக்குச்
சமமாக
மட்டுமில்லாமல்
கடவுளாகவே
நினைத்தும்
வந்ததால்
அவர் அவ்வாறு எழுதவில்லை.
ஆகவே
வால்மீகி
ராமாயண ராமர்
ஒரு
சாதாரணமனிதன்
போலவே தன் மனைவியிடம் கோபம்
கொள்ளுவதையும்,
சந்தேகம் கொள்ளுவதையும்,
பின்
நாட்டு
மக்களுக்காக
மனைவியைத் தியாகம்
செய்வதையும்
செய்ய
முடிகின்றது.
ஏன் தியாகம்
செய்ய
வேண்டும்?
எல்லாரும் நினைப்பது
போல்
வண்ணானும்,
வண்ணான்
மனைவியும்
பேசிக்
கொண்டார்கள்
என்பதாலா?
இல்லை,
அம்மாதிரி
எங்கேயும்
வால்மீகி
ராமாயணத்தில்
காணவே முடியாது.
பின் என்ன
தான் நடந்தது?
ராம,
ராவண
யுத்தம்
முடிந்து
ராமர்
அயோத்திக்குத்
திரும்பிப் பட்டாபிஷேகம்
முடிந்து
நல்லாட்சி
புரிந்து
கொண்டிருக்கும்
வேளையில் சில
வருடங்களில் சீதை
கருவுருகிறாள்.
கருவுற்றிருக்கும்
மனைவியை
மனமகிழ்விக்க
ராமர்
பலவிதங்களிலும் முயலுகின்றார்.
அப்போது சீதை
ராமரிடம்,
தான்
மீண்டும்
காட்டுக்குப்
போய்ச் சில தினங்கள்
ரிஷி, முனிவர்களுடைய
ஆசிரமத்தில்
இருந்து வரவேண்டும்
என்ற ஆசையைத் தெரிவிக்கின்றாள்.
மனைவியின்
ஆசையைப் பூர்த்தி
செய்வதாய்ச்
சொல்லுகின்றார்
ராமர். அப்போது
நாட்டின் பல
திசைகளுக்கு
அவர் அனுப்பி
இருந்த
தூதுவர்கள்
வந்திருப்பதாய்ச் செய்தி
வரவும், ராமரும்
அவர்களைச்
சந்திக்கப்
போகின்றார்.
அவர்களில்
ஒருவன், "பத்ரன்"
என்ற பெயர்
கொண்டவன்,
மிகவும்
தயக்கத்துடனும்,
வணக்கத்துடனும்
ராமரைப்
பார்த்து,
"அரசே,
மக்கள்
உங்கள்
நல்லாட்சியால்
மனம் மகிழ்ந்திருந்தாலும்,
அரசர்,
மனைவியின்
அழகிலும்,
அவளுடன்
வாழ்வதிலும்
உள்ள பெரிய
ஆசையால், பல
மாதங்கள் ராவணனிடம்
சிறை இருந்த
மனைவியைத்
திரும்பச்
சேர்த்துக்
கொண்டு
விட்டாரே?
ராவணனைக் கடல்
கடந்து
சென்று
கொன்று
வீழ்த்திய
அவரின் சாதனை,
இந்தச்
செயலால் மாசு பட்டுவிட்டதே?
சிறை
இருந்த ஒரு
பெண்ணை
எப்படி அவர்
திரும்பச்
சேர்த்துக்
கொண்டு
வாழலாம்?
நாளை
நம்
மனைவிகளுக்கும்
இம்மாதிரியாக
நேர்ந்தால்,
நாமும்
அவ்விதமே செய்யவேண்டும்,
ஏனெனில்
அரசன் எவ்வழி,
அவ்வழி
குடிமக்கள்"
எனப் பேசிக்
கொள்வதாயும்,
மற்ற
விஷயங்களில்
மக்கள்
பெருமளவு
திருப்தியாகவே
இருப்பதாயும்
தெரிவிக்கிறான்.
மனம் நொந்த
ராமர், மற்றவர்களையும்
பார்த்து இது
நிச்சயம் தானா
எனக் கேட்க,
அவர்களும் அவர்கள்
சென்ற
இடங்களிலும்
இம்மாதிரியான
பேச்சே
இருப்பதாய்ச்
சொல்லுகின்றனர்.
செய்வது
அறியாமல் திகைத்த
ராமர், தன்
சகோதரர்களிடம்
கலந்து
ஆலோசிக்கின்றார்.சீதை
அக்னிப்
பிரவேசம் செய்ததையும்,
அவள்
மாசற்றவள்
என்றே தாம் நம்புவதாயும்
தெரிவித்த
அவர், ஆனால்
இவ்வாறு ஒரு
அவப் பெயர்
ஏற்பட்டுவிட்டதே,
எனவும்
மனம்
நொந்தார். ஒரு
அரசனுடைய
அரசாட்சியில்
இவ்வாறு அவப்
பெயர் யாரால் ஏற்பட்டாலும்
அவன்
அவர்களைத்
துறக்கவேண்டியதே
நியாயம்.
உங்களால்
ஏற்பட்டிருந்தாலும் உங்களையும்
நான்
துறக்கவேண்டியதே!
இப்போது
சீதையை நான்
துறக்கவேண்டிய கட்டாயத்துக்குத்
தள்ளப்
பட்டிருக்கின்றேன்.
லக்ஷ்மணா,
நீ
நாளைக் காலை
அரண்மனைத் தேரைத்
தயார் செய்து
சீதையைக்
கங்கைக்
கரையில் உள்ள
ரிஷிகளின் ஏதாவதொரு ஆசிரமத்துக்கருகில்
விட்டு
விட்டு வா.
என்னுடைய
இந்த
முடிவுக்கு
மாறாக
ஒருவரும் பேச வேண்டாம்.
அது நீங்கள்
எனக்கு
இழைக்கும் தீங்கு.
மேலும்
சீதையும்
காட்டில் வாழவேண்டும்
என ஆசையும்
பட்டாள்"
என்று ஆணையிட்டுவிட்டு,
கண்ணில்
பெருகும்
கண்ணீரை
நிறுத்த
வழியில்லாமல்
தனிமையை
நாடிச் சென்றார்.
இனி தனக்கு
வாழ்நாள்
முழுதும்
சீதை கிடைக்க
மாட்டாளே
என்று
உணர்ந்தவர்
போல்.
மறுநாள்
சீதையை
லட்சுமணன்
கூட்டிச் செல்கின்றான்.
வழக்கம்போல்
சுமந்திரர்
தேரை
ஓட்டுகின்றார்.
யாருக்கும்
முகத்தில் மகிழ்ச்சி
இல்லை. இதை
அறியாத சீதை
தன் கணவன் இவ்வளவு
சீக்கிரம்
தன் ஆவலைப்
பூர்த்தி செய்வதை
அறிந்து தான்
மகிழ்ச்சி
அடைவதாயும்,
அங்கே
உள்ள
ரிஷிபத்தினிகளுக்கும்,
ரிஷி குமாரிகளுக்கும்
தான்
அளிக்கப்
போகும் பரிசுகள்
பற்றியும்
சொல்லிக்
கொண்டு
வருகின்றாள்.
கங்கைக் கரையும்
வந்தது.
லட்சுமணன்
"ஓ"வெனக்
கதறுகின்றான்.
சீதை சொல்கின்றாள்:"லட்சுமணா,
பிரிந்து
இருப்பதை
நினைத்தா
அழுகின்றாய்?
எனக்கும் ஸ்ரீராமரைப்
பிரிந்து
இருப்பது
வருத்தமாய்த்
தான்
இருக்கப்
போகின்றது.
ஆனால் எல்லாம்
கொஞ்ச
நாட்கள் தானே?
ஒன்று
செய்யலாம்,
நதியைக்
கடந்து
அக்கரைக்குச்
சென்று, ரிஷிகளின்
ஆசிரமத்தை
அடைந்து
அவர்களுக்குப்
பரிசுகள்
கொடுத்துவிட்டு
ஆசிகளைப் பெற்றுக்
கொண்டு
உடனடியாக
நான்
திரும்பி விடுகின்றேன்.
அது வரை
பொறுத்துக்
கொள்!" என்று
சொல்லி
நதியைக்
கடக்கச்
சொல்கின்றாள்.
நதியைக்
கடந்து
சென்றார்கள்.
ராமர் இல்லாத
தன்
வாழ்க்கைப்
பயணத்தைக்
கடக்கப் போவதை
அறியாத பேதை
சீதையும்
சந்தோஷமாய் நதியைக்
கடந்தாலும்,
மனதில்
உறுத்தலும்
சில
துர்ச்சகுனங்களும்
அவளையும்
வேதனைப்
படுத்தின.
லட்சுமணன்
மறுகரையை
அடைந்ததும் சீதையை
வணங்கி, ராமர்
தனக்கு இட்ட வேலையைச்
சொல்கின்றான்.
இது எனக்கு
மட்டுமில்லாமல்
மற்ற
தம்பிமார்,
மற்றும் அரண்மனையில்
யாருக்கும்,
இன்னும்
சொன்னால்
ராமருக்குமே
விருப்பம் இல்லாத
ஒன்று என்றும்
வேறு
வழியில்லாமல்
அரச
தர்மத்த்தைக்
காப்பாற்றவே
இவ்வாறு
செய்ய
நேர்ந்தது எனவும்
சொல்கின்றான்.
அவ்வளவில்
அங்கேயே சீதையை
விட்டுவிட்டு
லட்சுமணன் திரும்பும்போது
சீதை அவனிடம்
தான் பூர்ண கர்ப்பவதியாகவே
இங்கே
வந்திருப்பதை நினைவில்
கொள்ளவேண்டும்
என்று தன்
கர்ப்ப வயிற்றை
அழுகையுடனேயே
லட்சுமணனுக்குக் காட்டிச்
சொல்கின்றாள்.
லட்சுமணன்
வேதனையுடனேயே
திரும்ப சீதை
சத்தம்
போட்டு
அழுகின்றாள்.
அவள் அழுகுரல்
கேட்டு அங்கே
வரும்
ரிஷிகுமாரர்களும்,
மற்றவர்களும்
வால்மீகியிடம்
போய்ச் சொல்ல
அவரும் தன்
மனக்கண்களால்
பார்க்கக்
கூடிய திறமை
பெற்றவராய்
இருந்தமையால்
, நடந்ததை
ஊகித்துச்
சீதைத் தன்
ஆசிரமத்தில் வைத்துப்
பாதுக்காக்கின்றார்.
உரிய நேரத்தில்
இரண்டு ஆண் குழந்தைகள்
பிறக்க
அவர்கள்
இருவருக்கும்
வால்மீகியே
லவன், என்றும்
குசன் என்று
பெயர்
இடுகின்றார்.
தன் கையில் இருந்த
தர்பையை
இரண்டாய்க்
கிழித்து
மேல்பாகத்தால்
சுத்தம்
செய்யப்
பட்டவனைக்
"குசன்"
என்றும், தர்பையின்
கீழ்பாகத்தால்
சுத்தப்
படுத்தப்
பட்டவனை
"லவன்" என்றும் அழைக்குமாறு
கூறினார்.
பின்னர்
அந்தப் பிள்ளைகளுக்கு
அவரே குருவாக
இருந்து
அனைத்து
வித்தைகளையும்
கற்பித்தார்.
அந்த பிள்ளைகள்
தான் தன்
தகப்பனுக்கு
எதிரேயே
அமர்ந்து தன்,
தாயின்,
தகப்பனின்
சோகக்
கதையைத் தன்
தகப்பனிடமே பாடிக்
கொண்டிருந்தார்கள். இதில்
பால காண்டமும்,
ராமர்
ஏன் சீதையைப்
பிரிய
நேரிட்டது?
என்பதும்
நாளை பார்ப்போமா?

மேலே
நாம் காணும்
ஆசிரமத்தில்
தான் சீதை வந்து
தங்கியதாய்ச் சொல்லப்
படுகின்றது.
கதாசிரியையின்
கருத்துப்
படி, வால்மீகி
ராமரை ஒரு
சாதாரணமான கட்டுப்பாடுகளும்,
ஒழுங்கும்
நிறைந்த
மனிதனாக
மட்டுமில்லாமல்
"மனிதருள்
மாணிக்கம்" ஆகவே
திகழ்கின்றான்.
தன்
நாட்டுக்காகவும்,
நாட்டு
மக்களுக்காகவும்
தன் காதல் மனைவியையே
தியாகம்
செய்கின்றான்.
அம்மாதிரியான
சூழ்நிலைக்கு
அவன் தள்ளப் படுகின்றான்.
முதலில்
தந்தை
சொல்லைக்
காப்பாற்றிய
ஒரு
முன்மாதிரியான
மகன், பின்னர் சகோதரனுக்காக
நாட்டை
விட்டுக்
கொடுத்தவன்,
தன்
சிறிய
தாயாரின்
ஆசைக்காகக் காட்டுக்கும்
சென்றவன்,
அப்போதும்
தன் மனைவியை
விட்டுப்
பிரியாத அன்பான
கணவன், என்று
இம்மாதிரியான
ஒரு
தேர்ந்தெடுக்கப்
பட்ட
முன்னுதாரணம்
ஆன ஒரு
அருமையான அரசாட்சியும்
செய்து வந்த
அரசனின்
நேர்மைக்கும்,
திறமைக்கும்
பின்னே
அவனின்
தனிப்பட்ட
வாழ்க்கையின்
உறவுகளின்
அர்த்தங்கள்
தான் என்ன?
அதை
விவரிக்கும்
ஒரு கோணத்திலேயே
சில
காட்சிகளை
வால்மீகி
சித்திரித்திருப்பதாய்ச்
சொல்கின்றார்.
இனி, நாம்
நாளை முதல்
காணப் போகும்
பாலகாண்டத்தில்
இருந்து
ராமரின்
குணாதிசயங்கள் மட்டுமில்லாமல்,
மற்றவர்களின்
மேல்
அவருக்கு
உள்ள உறவின் வெளிப்பாடுகளையும்
அதன் தாக்கத்தையும்
காண்போம்.

ராமர்
தன்
மனைவியைப்
பிரிந்ததற்குக்
காரணமே
அவரின்
ஊழ்வினையும்,
விஷ்ணுவின்
அவதாரமாகவே
அறியப் பட்ட
அவர் ஒரு
கடவுளாக இருந்தாலும்,
தவறு
செய்தால் சாபத்துக்குக்
கட்டுப்
பட்டவரே
என்பதையுமே
நாளை காணப்
போகின்றோம்.
ஒழுக்கமும்,
நேர்மையும்,
சொன்ன
சொல்
தவறாமையும்
உள்ள ஒரு
மனிதன் தன் வாழ்நாளில்
கண்ட பேரிழப்புக்களயும்
அவற்றை அவன்
மனத்திண்மையுடனேயே
தாங்கிக்
கொண்டதுமே
ராமாயணத்தின் மையக்
கருத்தாக
அவர்
சொல்கின்றார்.
Chapter 4
பிருகு
முனிவரின்
ஆசிரமம். அவர்
மனைவி க்யாதி
தட்சனின்
மகள். ஆகவே
இயல்பாகவே அவளுக்கு
அசுரர்களிடம்
பாசம்
மிகுதியாக இருந்து
வந்தது.
தேவர்களிடம்
தோற்றுப் போன அசுரர்களை
அவள் தன்
கணவரின்
ஆசிரமத்தில்
மறைத்து
வைத்துப்
பாதுகாத்து
வந்தாள்.
அப்போது
இதை அறிந்த
மகாவிஷ்ணு,
ஏமாற்றிப்
பிழைத்து
வந்த
அசுரர்கள்,
இங்கே
பயம் இல்லாமல்
வாழ்வதற்கு
பிருகு
முனிவரின் மனைவியே
காரணம்
என்பதைத்
தெரிந்து
கொண்டு, தன்
சக்ராயுதத்தை
ஏவ, அவள்
தலை
துண்டிக்கப்
படுகின்றது.
தன் மனைவி
இறந்ததைக்
கண்ட பிருகு முனிவர்
கடும்
கோபத்துடன்,
தன்
மனைவியைக்
கொன்றவன் மகா
விஷ்ணுவே
என்று அறிந்திருந்தாலும்,
அவரைப்
பார்த்துச்
"சற்றும்
நியாயமே இல்லாமல்
குற்றமற்ற
என் மனைவியைக்
கொன்ற நீர்
மனிதப் பிறவி
எடுத்து, மனைவியைத்
துறந்து அதன்
பின்னரும் நீண்ட
காலம்
தனிமையில்
வாழக் கடவது!" என்று
சபிக்கின்றார்.
மகாவிஷ்ணுவும்,
தான் ராவண
சம்ஹாரத்துக்காக
மனிதப் பிறவி
எடுக்க
வேண்டியதன்
அவசியத்தை
உணர்ந்து கொண்டவராய்,
அந்தச்
சாபத்தை
ஏற்றுக்
கொண்டார்.
அவர் தான்
இந்தப்பிறவியில்
ராமராக
அவதரித்துள்ளார்.
இந்த
விஷயம்
துர்வாச
முனிவரால்
தசரதனுக்கு,
வசிஷ்டரின் முன்னிலையில்
சொல்லப்
பட்டதாயும்,
ஆகவே
இது
இவ்வாறுதான்
நடக்கும்
எனத் தான் முன்பே அறிந்திருந்ததாயும்,
என்றாலும்
இது பற்றிப்
பேசக்கூடாது
என்று தான்
பணிக்கப் பட்டிருந்ததாயும்
சுமந்திரர்
வாய் மூலமாக
லட்சுமணன்
சீதையை
வால்மீகி
ஆசிரமத்தில் தன்னந்தனியே
விட்டு விட்டு
வரும்
வழியில்
அறிந்து
கொள்கின்றான்.
யாராக
இருந்தாலும்
"விதி
வலியது"
என்பதும்,
முன்பிறவியின்
பாவங்களுக்கு
ஏற்ற தண்டனையை
அனுபவித்தே ஆகவேண்டும்
என்பதையும்
புரிந்து
கொண்டான்.
என்றாலும்
அவன் மனம்
அமைதி
அடையவில்லை. நாட்டுக்குத்
திரும்பி
ராமரிடம்
நடந்த விபரங்களைத்
தெரிவிக்கின்றான்.
ராமர் மன
அமைதியின்றித்
தவிக்கின்றார்.
அவர் தான் அஸ்வமேத
யாகம் செய்ய
நிச்சயித்துச் செய்யும்
வேளையில் லவ,
குசர்களால்
பாடப் பட்ட
ராமாயண
காவியத்தை மக்களோடு
மக்களாய்ச் சேர்ந்து
கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
**************************************************************************************
கோசல
நாட்டு
மன்னன் ஆன
தசரதன்
அயோத்தி என்னும்
மாநகரைத் தலைநகராய்க்
கொண்டு ஆட்சி
புரிந்து
வந்தான்.
அவனுக்குக்
குழந்தைகள்
இல்லை. பல
விதங்களிலும்
சிறப்பு
வாய்ந்த
மன்னனுக்கு
மூன்று
மனைவியர்
இருந்தனர்.
என்றாலும் மூவருக்கும்
குழந்தைகள்
இல்லை. நீதி
தவறாத மன்னன்
ஆன தசரதனின்
அவையின்
மந்திரிகள் நன்னடத்தை
வாய்ந்தவர்களாய்
இருந்ததிலும்,
குடிமக்கள்
தெய்வ பக்தி
நிரம்பி
இருந்ததையும்
கண்டு
ஆச்சரியம்
ஏதும் இல்லை
அல்லவா? தன்
மந்திரிகளைக்
கலந்து
ஆலோசித்த
மன்னன்
அஸ்வமேத
யாகம்
செய்தால் குழந்தை
பிறக்கும்
எனத்
தெரிந்து
கொண்டு
அதற்கான
ஏற்பாடுகளைச்
செய்யும்
வேளையில்,
தன்
மந்திரியும்,
தேரோட்டியும்
ஆன சுமந்திரர்
மூலம்
விபாண்டகரின்
மகன் ஆன ரிஷ்யசிருங்கர்
பற்றியும்,
பிறந்தது
முதல் பெண்களையே
அறியாத அவர்
அங்க தேசத்து
வறட்சியைப்
போக்க அந்த
தேசத்து
மன்னனால் வரவழைக்கப்
பட்டதையும்
சொல்கின்றார்.
பின்னர்
ரிஷ்யசிருங்கர்
நாட்டுக்குள் நுழைந்ததுமே
அங்க தேசம்
வறட்சி
நீங்கிப் பசுமை
பெற்று மழை
பொழியத்
துவங்கினதையும்,
மனம்
மகிழ்ந்த
அங்க தேச
மன்னன் தன்
மகள் ஆன சாந்தையை
ரிஷ்யசிருங்கருக்குத்
திருமணம் செய்வித்துத்
தன்னுடனேயே
வைத்திருப்பதையும்
சொல்கின்றார்.
அந்த ரிஷ்ய
சிருங்கர் இங்கே
வந்தால்
உங்கள்
கவலையைப்
போக்கிக் குழந்தை
வரம் பெற
யோசனையும்
சொல்லுவார் என்று
சுமந்திரர்
சொல்கின்றார்.
அதன் படியே
ரிஷ்ய
சிருங்கரை
மன்னன்
தசரதன்
வரவழைக்கின்றார்.
ரிஷ்ய
சிருங்கரும்
அஸ்வமேத
யாகம்
முடிந்ததும்
தசரதரைப்
புத்ர காமேஷ்டி
யாகம்
செய்யும்படிப்
பணிக்கவே,
தசரதர்
புத்ரகாமேஷ்டி
யாகம் ரிஷ்ய சிருங்கரின்
தலைமையில்
செய்கின்றார்.
யாகக்
குண்டத்தில்
இருந்து தேவ
தூதன் போன்ற
ஒருவர்
எழுந்து
வந்து தன்
கையில் வைத்திருந்த
ஒரு தங்கப்
பாத்திரத்தை தசரதரிடம்
கொடுத்து,
"மன்னா!
இதில் உள்ள
பாயாசத்தை
உன்
மனைவிமார்
அருந்தச் செய்! யாகம்
செய்ததின்
பலனைப்
பெறுவாய்!"
என்று கூறி
மறைகின்றான்.
தசரதரும் அதை
வாங்கிக் கொண்டு,
முதல்
மனைவியான
கெளசலைக்குப்
பாயாசத்தில்
பாதியைக்
கொடுக்கின்றார்.
மிச்சம்
இருந்த
பாதியில்
பாதி பாகத்தை
சுமத்திரைக்கும்,
மிச்சம்
இருந்த
பாதியைக் கைகேயிக்கும்
கொடுத்த
பின்னரும்
கொஞ்சம் மிச்சம்
இருக்கவே அதை
மீண்டும் சுமத்திரைக்கே
கொடுக்கின்றார்.
கொஞ்ச நாட்களில்
மூன்று
மனைவியருமே
கர்ப்பம் தரிக்கின்றார்கள்.
*************************************************************************************
தசரதனுக்கு அறுபதினாயிரம்
மனைவிகள்
என்ற ஒரு
வழக்கு உண்டு. ஆனால்
வால்மீகியின்
ராமாயணத்தில் தசரதனுக்கு
இந்த மூன்று
மனைவியர்
தவிர வேறு
மனைவியர்
இருப்பதாய்
எங்குமே
குறிப்பிடவில்லை
என்பதும்
கவனிக்கத்
தக்கது.
தசரதனின்
அந்தப்
புரத்தில்
நூற்றுக் கணக்கான
பெண்கள்
இருந்து
வந்தார்கள்
என்று
சொல்லப் பட்டாலும்,
அவர்கள்
எல்லாருமே மனைவியர்
என்று
எங்குமே
குறிப்பிடப்
படவில்லை.
அந்தப்
புரத்தின்
வேலைகளைக் கவனிக்கும்
பெண்கள், அந்தரங்கத்
தாதிமார்,
மற்றும்
தசரதனின்
உறவின்
முறைப்
பெண்கள்
என்ற
அளவில்
மட்டுமே
குறிப்பிடப்
பட்டிருக்கின்றது.
மற்றபடி
கம்பராமாயணத்தில் இருக்கிறதானும்
பார்த்தேன்,
எனக்குத்
தெரிந்த
வரையில்
அதிலும்
அவ்வாறு
குறிப்பிடப் படவில்லை.
மேலும்
ரிஷ்யசிருங்கரின்
மனைவியான
சாந்தை
என்பவள் அங்க
தேச மன்னன் ஆன ரோமபாதனின்
மகள் ஆக
இருக்கச்
சிலர் அவளை தசரதனின்
மகள் என்றும்
எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்.
அதுவும் தவறு.
இனி நாளை,
தேவருலகில்
என்ன நடந்தது
என்றும்
பார்க்கலாம்,
நாளை
ஸ்ரீராமர்
பிறக்கப்
போகின்றார்.
காத்திருங்கள்.
அத்தியாயம்
ஐந்து:
ரிஷ்யசிருங்கரால்
புத்ரகாமேஷ்டி
யாகம் நடந்து
கொண்டிருந்த
வேளையில்
தேவர்களும்,
சித்தர்களும்,
முனிவர்களும்,
ரிஷிகளும்
பிரம்மாவை
அணுகி, "உங்களால்
ஆசீர்வதிக்கப் பட்ட
ராவணன்
என்னும்
ராட்சசனின்
தொல்லைகள்
தாங்க
முடியவில்லை.
யாராலும்
அவனை வெல்ல முடியாத
வரம் வேறே
பெற்றிருக்கின்றான்.
அவனைக்
கண்டால்
சூரியனும் மேகங்களுக்கிடையில்
மறைந்து
கொள்கின்றான்.
வருணனும் தன்
பொழிவை
மட்டுப்
படுத்திக் கொள்கின்றான்.
வாயுவும் அடக்கியே
வீசுகின்றான்.
சமுத்திர
ராஜன் ஆன அலைகடலும்
தன் அலைகளை
அடக்கியே
வைத்துக்
கொள்ள வேண்டி
உள்ளது.
இதற்கு என்ன
வழி?" எனக்
கேட்கின்றார்கள்.
பிரம்மாவும்,
"ஆம்,
நாம்
இதனை அறிவோம்,
இந்த
ராவணன், தன் மமதையால் தேவர்கள்,
யக்ஷர்கள்,
அசுரர்கள்,
ராக்ஷசர்கள்
எனக்
கேட்டுக்
கொண்டானே
ஒழிய, மனிதர்களைத்
தூசி
மாத்திரம்
நினைத்து அவர்களை
அலட்சியம்
செய்து
விட்டான்.
ஆகவே அவன் பிறப்பு
மனிதப்
பிறவியாலேயே
ஏற்படவேண்டும்.
இதற்கு
ஸ்ரீமந்நாராயணனே
அருள் புரிய வேண்டும்!"
என்று சொல்ல,
அப்போது
முனிவர்களும்,
தேவர்களும்
நாராயணனைத்
துதிக்க, அவரும்
அவர்களின்
வேண்டுகோளை
ஏற்றுத் தான்
மானுடனாய்த்
தோன்றி, ராவணனை
வதம் செய்வதாய்
உறுதி
அள்க்கின்றார்.
தன்னுடைய அம்சத்தை
நான்கு
பாகங்களாய்ப்
பிரித்துக் கொண்டு,
அப்போது
புத்ர
காமேஷ்டி
யாகம்
செய்யும்
தசரதனுக்கு
மகன்களாய்ப்
பிறக்கத் தீர்மானித்துக்
கொண்டார்
மகாவிஷ்ணு.
உடனேயே
பிரம்மாவும்
தேவர்களுக்கும்,
யட்சர்களுக்கும்
மானுடனாய்ப்
பிறந்து ராவண
வதம் செய்யப்
போகும்
விஷ்ணுவுக்கு உதவுமாறு
வேண்டுகோள்
விடுக்க, மாயவித்தைகள்
அறிந்தவர்களாயும்,
வீரம் செறிந்தவர்களாயும்,
தர்மமும்,
நீதியும்
அறிந்தவர்களாயும்,
அறிவாளிகளாகவும்,
வானர உருவம்
படைத்தவர்களாயும்
உள்ள பல
சந்ததிகளை
உருவாக்கினார்கள்.
இந்திரன் தன் சக்தியால்
வாலியை
உருவாக்க,
சூரியனால்
சுக்ரீவன்
உருவாக்கப்
பட்டான். பிரம்மாவோ ஏற்கெனவேயே
ஜாம்பவானைப்
படைத்திருந்தார்.
நளனை
விஸ்வகர்மா
படைக்க, ராமதூதனாகவும்,
அன்றும்,
இன்றும்,
என்றும்
ராமசேவையில்
ஈடுபட்டிருப்பவனாகவும்,
எங்கெல்லாம்
ராம கதை
சொல்லப்
படுகிறதோ,
அங்கெல்லாம்
மானசீகமாய்
அந்தக்
கதையைக் கேட்டு
உருகவேண்டும் என்பதற்காகவே,
தனக்கு
அளிக்கப்
பட்ட
வைகுந்தப்
பதவியைக் கூட மறுத்தவனும்
ஆன அனுமனை வாயு
படைத்தான்.
இப்படி
வானரத்
தலைவர்களும்,
வீரர்களும்
உருவாக்கப்
பட்டு வாழ ஆரம்பித்தனர்.
இவர்களுக்கு
வேண்டிய
உருவத்தை
எடுத்துக்
கொள்ளும்
வல்லமையும்,
கடல்,
மலை
போன்றவற்றைத்
தாண்டக்
கூடிய பலமும்,
மரங்களை
வேரோடு
பிடுங்கும்
வீரமும்
வாய்ந்தவர்களாக
உருவாக்கப்
பட்டார்கள்.
இவர்களை வாலி
அரசனாய்
இருந்து
ஆண்டு வந்தான்.
இனி
அயோத்தியில்
என்ன நடந்தது?
************************************************************************************
உரிய
காலத்தில்
அரசியர்
மூவருக்கும்
குழந்தைகள்
பிறந்தன. சித்திரை
மாதம், சுக்கிலபட்ச
நவமி
திதியில்,
புனர்வஸு
நட்சத்திரத்தில்
ஐந்து
கிரகங்கள்
உச்ச நிலையில்
இருந்த சமயம்
ஸ்ரீராமர்,
கோசலைக்கும்,
புஷ்ய
நட்சத்திரத்தில்
கைகேயிக்கு பரதனும்,
ஆயில்ய
நட்சத்திரத்தில்
சுமித்திரைக்கு
லட்சுமணனும்,
சத்ருக்கனனும் பிறந்தனர்.
நாடே
கோலாகலத்தில்
ஆழ்ந்தது.
தேவர்கள்
கோலாகலத்தில்
ஆழ்ந்தார்கள். யக்ஷர்களும்,
கின்னரர்களும்
பூமாரி
பொழிந்தனர்.
கந்தர்வர்கள்
தன் இனிமையான குரலினால்
இனிமையான
கீதம்
இசைத்தார்கள்.
குலகுருவான
வசிஷ்டர்,
கெளசலையின்
மகனுக்கு ராமன்,
என்றும்,
கைகேயியின்
மகனுக்கு
பரதன் எனவும்,
சுமித்திரையின்
மகன்களுக்கு முறையே
லட்சுமணன்,
சத்ருக்கனன்
என்றும்
பெயரிட்டார்.
குழந்தைகள்
பிறந்து
வளர்ந்து வருகின்றன.
சகல
வித்தைகளையும்
கற்றுக் கொண்டு
வளர்ந்தார்கள்
அரசகுமாரர்கள் நால்வரும்.
முறையாக
அனைத்துச்
சடங்குகளும்
செய்விக்கப்
பட்டு, அனைத்துக்
கலைகளிலும் தேர்ச்சி
பெற்ற
அரசகுமாரர்களுக்குத்
திருமணப்
பருவம் வந்து
விட்டதை
உணர்ந்த
மன்னன், தன்
மந்திரி, பிரதானிகளிடம்
அது பற்றி
ஆலோசிக்க
ஆரம்பித்தான்.
அப்போது
அரசவைக்கு வருகை
தந்தார்
விசுவாமித்திர
முனிவர்.
ஸ்ரீராமரின்
இந்தக்
குழந்தைப் பருவத்தை
அருணகிரிநாதர்
தமது வருகைப்
பருவப்
பாடல்களில்
பத்து முறை
வருக என
அழைத்துப்
பாடி
இருப்பதாய்க்
கேள்விப் படுகிறோம்.
புத்தகம்
கிடைக்கவில்லை!
:( பிள்ளைப்
பருவங்கள்
பத்து என்று
வைத்துப் பிள்ளைத்
தமிழ்
பாடுவதுண்டு,
அந்தக் கணக்கிலேயும்,
திருமாலின்
அவதாரங்கள்
பத்தையும்
கணக்கில்
கொண்டும்
இவ்வாறு பாடி இருக்கலாம்
என்று
ஆன்றோர்
வாக்கு.
அருணகிரிநாதரின்
கூற்றுப் படி
சூரியன் -
சுக்ரீவன்,
இந்திரன்
- வாலி, அக்னி
-நீலன், ருத்திரன்
- அனுமன், என்பதோடு மட்டுமன்றி,
பிரம்மா
தான்
ஜாம்பவான்
என்றும்
சொல்கின்றார்.
சிவ
அம்சமாகவே
அனுமன்
தோன்றியதாய்த்
தம் திருப்புகழிலும்
சொல்லி
இருக்கிறதாயும்
கேள்விப் பட்டிருக்கிறேன்.
திருப்புகழைப் பார்க்கணும்.
*************************************************************************************
இந்த வானரர்கள்
பற்றி
அனைவருக்குமே
எழும் சில சாதாரண
சந்தேகங்கள்
இந்த
ராமாயணத்தை எழுதியவருக்கும்
ஏற்பட்டிருக்கின்றது. அவர்
கண்ட தீர்வு
இது தான்:
இந்தக் கதை
நடந்த
காலத்தில்
இந்தப்
பிரபஞ்சத்தில்
கடவுளர், வானவர்,அசுரர்கள்,
ராட்சசர்கள் அவர்கள்
பெற்ற
வரங்கள், செய்த
தவங்கள், சாபங்கள்,
மந்திர,
தந்திரப்
பிரயோகங்கள்,
அவற்றினால்
ஏற்பட்ட நல்
விளைவுகள்
மட்டுமின்றி
துர்
விளைவுகள்,
பறக்கும்
ரதங்கள், சக்தி
வாய்ந்த ரிஷி
முனிவர்கள்,
அதிசயமான
வடிவம் கொண்ட
பேசும்
மிருகங்கள்,
பேசும் பறவைகள்,
வீரம்
செறிந்த
மனதனைப் போல்
பேசும், வாழ்க்கை
நடத்தும்
குரங்குகள்,
இவற்றுக்கு
நடுவில் ஒரு
ஒழுக்கம்
செறிந்த, சற்றும்
கண்ணியம்
தவறாத, அரச
நீதியை
மீறாத
சொன்ன சொல்
தவறாத ஒரு
மனிதனின்
வாழ்க்கைப்
போராட்டமாகக்
காணுகின்றார்.
கடைசி வரையிலும்
தான் ஒரு
அவதார
புருஷன்
என்பது தெரிந்து
கொள்ளாத ஒரு
சாதாரண
மனிதனாகவே ராமன்
வால்மீகியால்
படைக்கப்
பட்டிருக்கின்றான்.
அதனாலேயே
பின்னர்
வரும் சில தவறுகளுக்கும்
அவன் காரணம்
ஆகின்றான்.
ஒரு தேவதைக்
கதையில் உள்ள
அனைத்துச் சம்பவங்களுக்கும்
இதில் குறை
இல்லை. அதே சமயம்
மனிதன்
எவ்வாறு
வாழவேண்டும்
என்று உணர்த்தவும்
செய்கின்றது.
ஆசிரியரின்
கருத்துக்கள்,
ஒவ்வொரு அத்தியாயத்திலும்
முடிவில்
வரும்.
முழுக்க
முழுக்க
வால்மீகி
ராமாயணத்தையே எழுதப்
போவதாய்
இருந்தாலும்
சில சமயங்களில்
வேறு
ராமாயணங்களும்
குறிப்பிடப்
படும். சன்
தொலைக்காட்சியிலே
"ராமாயணம்"
தொடர் வருவதாய்
வேந்தர்
தெரிவித்திருந்தார்,
என் அண்ணா
பெண்ணும் அதை
உறுதி
செய்தாள்.
என்றாலும்
நான் அதைப்
பார்ப்பதில்லை,
அதன் தாக்கமும்
இதில் வராது,
முற்றிலும்
மாறுபட்டே
இருக்கும்.
அத்தியாயம்
ஆறு:
//ஸ்ரீராமரின்
இந்தக்
குழந்தைப்
பருவத்தை அருணகிரிநாதர்
தமது வருகைப்
பருவப்
பாடல்களில்
பத்து முறை
வருக என
அழைத்துப் பாடி
இருப்பதாய்க்
கேள்விப்
படுகிறோம். புத்தகம்
கிடைக்கவில்லை!
:( பிள்ளைப்
பருவங்கள்
பத்து என்று
வைத்துப் பிள்ளைத் தமிழ்
பாடுவதுண்டு,
அந்தக்
கணக்கிலேயும்,
திருமாலின்
அவதாரங்கள்
பத்தையும்
கணக்கில் கொண்டும்
இவ்வாறு பாடி
இருக்கலாம்
என்று ஆன்றோர்
வாக்கு.
அருணகிரிநாதரின்
கூற்றுப் படி
சூரியன் -
சுக்ரீவன்,
இந்திரன்
- வாலி, அக்னி
-நீலன், ருத்திரன்
- அனுமன், என்பதோடு
மட்டுமன்றி,
பிரம்மா
தான்
ஜாம்பவான்
என்றும்
சொல்கின்றார்.
சிவ
அம்சமாகவே அனுமன்
தோன்றியதாய்த்
தம்
திருப்புகழிலும்
சொல்லி
இருக்கிறதாயும்
கேள்விப் பட்டிருக்கிறேன்.
திருப்புகழைப்
பார்க்கணும்.//
ஸ்ரீராம
நவமியை ஒட்டி
எங்க தலைவி
ராமாயணக்
கதையை
நம்பிக்கையில்
இட்டு வருகிறார்.
அதில்தான்
மேற்கண்ட
இந்தக்
கருத்தையும்
சொல்லி
இருக்கிறார்!
எனக்கு
தலைவி மேல
கோபம்!
உண்மையான
தொண்டன்
இங்கிருக்க
அவங்க
திருப்புகழைப்
புரட்டப்
போறேன்னு
சொல்லிட்டாங்களே!!
சரி! சரி!
தலைவின்னாலே
இப்படித்தான்
இருப்பாங்க!
நாமள்லாம்
சாதாரணத்
தொண்டர்கள் தானே!
இதோ
அவர்கள்
தேடிய அந்தத்
திருப்புகழ்!
பத்து
விதமாக ராமனை கோசலை
அழைத்ததை
அருணையார்
விளக்கிப்
பாடிய பாடல்!
ஸ்ரீராமனுக்கு
ஒரு அணில் செய்த
மாதிரியான
உதவின்னு
நினைச்சுக்கங்க!
அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்
.. "தொந்தி
சரிய"
"ஆவி
பிரியுங்கால்
மயில் மீது
வந்து எனையாள்!"
.............பாடல்.............
தந்த
தனன தனனா
தனனதன
தந்த
தனன தனனா
தனனதன
தந்த
தனன தனனா
தனனதன -- தனதான
தொந்திசரிய மயிரே
வெளிற நிரை
தந்தமசைய
முதுகே வளைய
இதழ்
தொங்கவொருகை
தடிமேல்வர
மகளிர் --
நகையாடி
தொண்டுகிழவ
னிவனாரென
இருமல்
கிண்கிணெனமு
னுரையே
குழறவிழி
துஞ்சுகுருடு
படவே
செவிடுபடு --
செவியாகி
வந்தபிணியு
மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ
யுறுவே
தனையுமிள
மைந்தருடைமை
கடனே
தெனமுடுகு -- துயர்மேவி
மங்கை
யழுது விழவே
யமபடர்கள்
நின்றிசருவ
மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது
கடிதே
மயிலின்மிசை
-- வரவேணும்
எந்தைவருக
ரகுநா யகவருக
மைந்தவருக
மகனே
யினிவருக
என்
கண்வருக எனதா
ருயிர்வருக -- அபிராம
இங்குவருக
அரசே
வருகமுலை
யுண்கவருக
மலர்சூ
டிடவருக
என்றுபரிவி னொடுகோ
சலைபுகல --
வருமாயன்
சிந்தைமகிழு
மருகா
குறவரிள
வஞ்சிமருவு
மழகா அமரர்சிறை
சிந்த
அசுரர்
கிளைவே
ரொடுமடிய --
அதிதீரா
திங்களரவு
நதிசூ டியபரமர்
தந்தகுமர
அலையே
கரைபொருத
செந்தி
னகரி லினிதே
மருவிவளர் -- பெருமாளே.
00000000000000000000000000000000000000000000000000000000000
சைவம்,
வைணவம்
இவற்றில்
பேதம்
ஒன்றுமில்லை
எனப் பகரும் அற்புதக்
கவிதை இது!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
...........பொருள்.................
[வழக்கம் போல்
பின்
பார்த்து
முன்
பார்க்கலாம் !]
"எந்தை
வருக ரகுநாயக
வருக
மைந்த வருக
மகனே இனி வருக
என்கண்
வருக எனது ஆருயிர்
வருக
அபிராம
இங்கு வருக
அரசே வருக
முலைஉண்க
வருக மலர்
சூடிட வருக
என்று
பரிவினோடு
கோசலை புகல
வருமாயன்சிந்தை
மகிழு மருகா"
பலவாறு
தவம்
செய்துவேண்டியதின் விளைவாய்
மன்னு
புகழ்
கோசலைதன்மணிவயிறு
வாய்த்த
ரகுகுலம்
தழைக்க வந்த
எந்தையே
வருக!
'மைந்த
வருக' வென
அழைத்ததற்கோர்
காரணமும் இங்குண்டு!
தனக்குரிய
வயது வந்தும்
தன்
கையை
நம்பாமல்
தந்தையின் வருவாய்
அறியாமலும்,
அவர்
அணைப்பில்
இருக்கிறவன் 'பாலன்'.
வயதான தந்தையங்கு
வருவாயைக்
கொன்டுவர,
தானதற்கு
உதவிடாமல்
தான்
தோன்றியாய் இருப்பவன்
'பிள்ளை'.
தந்தைக்கே
ஞானம் உரைக்கும்
அறிவு
பெற்றவன்
'குமாரன்'.
தந்தை
தாயின் நலம்
பேணி
அவர்க்குக்
கருமம்
செய்தங்கே
நற்கதிக்கு
அனுப்புபவன் 'புத்திரன்'.
இருக்கும் காலத்தில்
பெற்றவர்
நலம் பேணி
நற்செயல்கள்
புரிபவன் 'புதல்வன்'.
தன் குடும்ப
நலன் பேணி
தந்தையவன்
கடனேற்று
ஆலமரம்
போல்
காப்பவனே 'மகன்'.
தன்
குடும்பம்,
தன்
தாய்
தந்தையர்
குடும்பம்
குருவின் குடும்பம்
மற்றும்தம்
நண்பரின்
குடும்பம்
இவையனைத்தும்
தன்
குடும்பம் போல்
காப்பவனோ 'மைந்தன்'!
இராமனோ
தன்
குடும்பம்
மட்டுமின்றி
குகன்,
சுக்ரீவன்,
விபீடணன்
குடும்பமனைத்தையும்
காத்திடுவான்
நாளை என
அறிந்து
'மைந்த
வருக' வென
வழைத்து,
பின்,
தன்
குடும்ப
மானமும்
காப்பவனும் இவனெனத்
தெளிந்து
'இனி
மகனே வருக'
வெனவும்
அழைத்திட்டாள்
மாதரசி
கோசலை!
எனது
கண்ணின்
மணியே
வருவாய்!
என்
ஆருயிர்க்கு
நிகரானவனே வருவாய்!
அழகிற்
சிறந்தவனே
வருவாய்!
இம்மாநிலத்தின்
அரசனே வருவாய்!
தான்
அந்தக் குண
நலன்கள்
தன்னங்கே
கொண்டதனால்,
தாயின் முலைப்பாலைக்
குடிக்கின்ற
அவனுக்கும்
அந்நலங்கள்
வரட்டுமென
'முலையுண்க வருக'
வெனவும்
அழைக்கின்றாள்!
மணக்கும்
இந்த
நறுமலரைச்
சூடிடவே வருவாய்!
என
அன்னையாம்
கோசலையும்
மகிழ்ந்து
கொண்டாடி
மனம்
குளிர அழைக்கின்ற
மாயவனாம்
இராமனெனும்
அவதாரமாய்
வந்த
அந்தநாராயணனும்
,
தானங்கு
மாயத்தால்
கோசலையின்
அன்பிற்குக்
கட்டுண்டு
கிடந்த நிலை போலே
இங்கிந்த
சரவணனும்
கார்த்திகைப்
பெண்டிர்
அழைத்திடவே அறுமுலையுண்ணும்
காட்சியினைக்
கண்டே மனம்
மகிழும் படி
திருவிளையாடும் முருகா!
"குறவர்
இளவஞ்சி
மருவும்
அழகா"
அழகன்
இவனே எனத் தெளிந்து
உனை
அணைக்க
வருகின்ற
குறவள்ளியின்
மணாளனே!
"அமரர்
சிறை சிந்த,
அசுரர்
கிளை வேரொடு
மடிய
அதிதீரா"
பல
யுகமாய்
சிறையில் உழன்று
நெடுந்துயர்
அடைந்திட்ட
தேவரெனும்
நற்குணங்கள்
அசதி,
சோம்பல் எனும்
தாமச
குணம் என்னும்
அசுரரால்
வருந்தி
நிற்க
அயர்வை
அகற்றி, நல்லுணர்வை
அளிக்க,
அசுரரை
வாட்டி, தேவரை
சிறை மீட்ட
பெருவீரம்
படைத்த
முருகா!
"திங்கள்
அரவு நதி
சூடிய பரமர்
தந்த குமர"
நீயே
சரணமெனத் தனை
நாடி
வந்த
சந்திரனையும்,
உனைக்
கொல்வேன்
எனச் சபதம்
செய்து
ஓடி
வந்த பாம்பினையும்,
ஒரு
சேர அன்பு
கொண்டு
அபயமளித்து,
பாய்ந்து
வந்த கங்கையின்
சீற்றமடக்கிக்
கருணையினால்,
தன்
தலையில்
இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின்
திருக்குமரா!
"அலையே
கரை பொருத
செந்தில்
நகரில்
இனிதே
மருவி வளர்
பெருமாளே"
பல்வகையாம்
எண்ணமெனும்
பெருஅலைகள்
ஓடிவந்து
தன்னடியில் கலந்தங்கே
தாம்
அமைதி
எய்துமாறு
செந்திலம்பதியினிலே
உறைகின்ற
பெரிய கடவுளே!
"தொந்தி
சரிய, மயிரே
வெளிற,நிரை
தந்தம் அசைய,
முதுகே
வளைய,இதழ் தொங்க,
ஒரு
கை தடி மேல்
வர
மகளிர்
நகையாடி
தொண்டு
கிழவன் இவன்
ஆர் என"
என்
வயது ஏறிடும்
காலத்தே
வயிறங்கே
பெருத்து முன்னே
தொந்தியெனச் சரியவும்,
கருநிறமாய்
நான் காத்த
முடியங்கு
வெளுத்துப் போய்
நரைமுடியாய்
ஆகிடவும்,
உறுதியாய்
நான்
தேய்த்து
நிதம்
வளர்த்த
பற்களும்
அங்கங்கே
அசைந்திடவும்,
வீரமாய்
நிமிர்ந்தங்கு
காட்டிய
முதுகும்
பல்லக்கு
போலின்று
வளைந்திடவும்,
பவழம்
போல் விரிந்திருந்த
உதடதுவும்
தொங்கிடவும்,
இருகரம்
வீசி நடந்த
நான் இன்று
ஒருகரத்தில்
தடி ஒன்றை
ஊன்றி
நடக்கவே
நேர்ந்திடவும்,
அதைக்கண்டு இளவயது
மங்கையரெலாம்
'யார்
இந்தத்
தொண்டு
கிழவன் இங்கே'
என நகைத்திடவும்,
"இருமல்
கிண்கிணென
முன்
உரையே குழற
விழி
துஞ்சு
குருடு
படவே
செவிடுபடு
செவியாகி
வந்த
பிணியும்
அதிலே
மிடையும் ஒரு பண்டிதனும்
மெய்
உறு
வேதனையும்"
இருமல்
எனும்
கொடும்பாவி
'கிண் கிண்'
எனஓசையுடன்
வெளிக்கிளம்பி,
இதுகாறும்
திருத்தமாய்ப்
பேசிய பேச்சுகளும்
குழறிப்போய்,
ஒளியுடன்
விளங்கிய
கண்பார்வை
இன்று
தூங்குதல் போலே
மங்கிடவும்,
துல்லியமாய்
இதுவரையில்
கேட்டுவந்த
காதுகளும்இன்று
பஞ்சடைத்து
செவிடாகவும்,
மிடுக்கென
வாழ்ந்த
தேகம் இன்று
நொடிக்கொரு நோயென
ஆட்பட்டு,
அதனாலதை
அகற்றவே ஒரு
வைத்தியனும்
நிதம்
எந்தன் வீடு
தேடி வந்திடலும்,
நோயின்
துயரால் என்
மேனி
வாடுதலும்,
"இள
மைந்தர்
உடைமை கடன் ஏதென,
முடுகு
-- துயர்மேவி,
மங்கை
அழுது விழவே,
யமபடர்கள்
நின்று
சருவ,
மலமே
யொழுக,உயிர்
மங்குபொழுது,
கடிதே
மயிலின் மிசை வரவேணும்."
என்னுயிர்
போதல்
நிச்சயமெனத்
தெளிந்து,
தன்
தந்தை 'இன்னுமென்ன கடன்
விட்டுச்
செல்கிறானோ'
என
என்
இளவயது மக்களும்
கணக்கிட்டு நின்றிடவும்,
வாய்
பேச
வழியின்றி,
இதனை
நான் கேட்டே
மனது
துயர் பெருகி மயங்கிடவும்,
என்
மனையாள்
ஓவெனக் கதறி
என்மீது
விழுந்து அழுதிடவும்,
எமதூதர்
வந்தங்கு
என்னுயிர்
பற்றிடவே
எதிர்பார்ப்பாய் வந்திடவும்,
என்
மலம் அங்கு
நீர் போல்
ஒழுகிடவும்,
என்
உயிர் சற்றே
எனை விட்டுப்
போகின்ற
நேரமதில்
முருகா நீ
அழகான
மயில் மீதேறி
எனை
வந்து காத்திட
வேண்டுகிறேன்!
0000000000000000000000000000000000000000000000000000000000000000
அருஞ்சொற்பொருள்:
தந்தம்= பல்
துஞ்சு=
தூங்குதல்
மிடையும்=
நெருங்கும்
முடுகு=
இதனால்
ஆகிய
கடிதே=
விரைவாக
அபிராம=
அழகிற்
சிறந்தவன்
------------------------------------------------------------------------------------------------
வேலும் மயிலும்
துணை!
முருகனருள்
முன்னிற்கும்!
அருணகிரிநாதர்
தாள் வாழ்க!
**************************************************************************
டாக்டர் சங்கர்
குமாருக்கு
என்
மனமார்ந்த
நன்றிகள்.
அத்தியாயம்
ஏழு
தசரத
மன்னனின் சபை.
மன்னனின்
மந்திரி
பிரதானிகள்
வீற்றிருக்கின்றனர்.
அரச குமாரர்களின்
திருமணம்
பற்றியப்
பேச்சு வார்த்தைகள்
நடந்து
கொண்டிருக்கும்
வேளை. அப்போது
வாயிலில்
வந்தார்
விசுவாமித்திர
முனிவர்.
இவரும் ஒரு
அரசனாக
வாழ்ந்து விட்டுப்
பின்னர்
முனிவராக
மாறியவரே.
வசிஷ்டருடன்
ஏற்பட்ட
சொந்தப்
பகையால்
தாமும்
ஒரு
ரிஷியாக மாற
உத்தேசித்துக்
கடுந்தவங்கள்
செய்து
பின்னர்
முதலில்
ராஜரிஷி, பின்னர்
பிரம்ம ரிஷி
என்ற பதவியை
அடைந்தவர்.
அவர்
வாயிலில்
காத்திருக்கும்
செய்தி
கேட்ட
தசரத மன்னன்
உடனேயே
வாயிலுக்குச்
சென்று அவரை
எதிர்கொண்டு
அழைத்து
வந்தான்.
மன்னனிடம்
விசுவாமித்திரர்
ஏதோ கேட்க வந்திருப்பதை
உணர்ந்த
தசரதன் அவர்
கேட்பதை
உடனே
தருவதாயும்
வாக்களிக்கின்றான்.
முனிவர் தாம்
யாகம்
செய்வதாகவும்
அதற்கு
இடையூறாக
மாரீசன், சுபாஹூ
என்னும் இரு
ராட்சதர்கள்
பெரும் இடையூறு
செய்வதாயும்,
மாமிசத்தையும்,
ரத்தத்தையும்
யாககுண்டத்தில்
போடுவதாயும்,
அவர்களைச்
சபிப்பது ஒன்றும்
பெரிய விஷயம்
இல்லை, ஆனால்
அதனால் நான்
செய்ய
முனைந்திருக்கும்
யாகத்தின் பலன்
கிட்டாது.
கோபம்
சிறிதும்
காட்டாமல் செய்யவேண்டிய
யாகம் அது.
ஆகவே
உன்னுடைய மூத்த
மகன் ஆன ராமனை
என்னோடு
அனுப்பி
வைப்பாயாக,
அவன்
வந்து என்
துயரத்தைத் தீர்ப்பான்
என்று
மிகுந்த
நம்பிக்கையுடனேயே
சொல்கின்றார்.
மன்னன்
மனம் குலைந்து
போக, அவன்
துயரத்தைக்
கண்ட முனிவர்,
"மன்னா,
இதனால்
உன்
மகனுக்குத்
தீங்கு
நேராது
என உறுதி
அளிக்கின்றேன்.
மூவுலகும் போற்றும்படியான
புகழை அவன்
அடைவான். அந்த ராட்சதர்களுக்கு
ராமன் கையில்
தான் மரணம் என்பது
உறுதி. அவன்
ஒரு மாமனிதன்
என்பதை
அறிவாயாக!
வசிஷ்டரும்
இதனை அறிவார்.
பிரிவினால்
கலங்காதே!
ஜெயம்
உண்டாகட்டும்!" என்று
கூறியும் மன
அமைதி அடையாத
மன்னன் தன்னால்
ராமனைப்
பிரிந்து ஒரு
கணம் கூட
இருக்க
முடியாது,
என்று
கதறுகின்றான்.
அப்படிப்
பட்ட கொடிய ராட்சதர்கள்
யார் எனக் கேட்கும்
மன்னனிடம்
விசுவாமித்திரர்,
புலஸ்திய
ரிஷியின்
வம்சத்தில்
உதித்தவன் ராவணன்
என்னும்
ராட்சசன்,
இலங்கையை
தன் சகோதரன்
ஆகிய
குபேரனிடமிருந்து
பிடுங்கிக் கொண்டு
ஆண்டு
வருவதோடு தன்
தவ
வலிமையாலும்,
தேக
வலிமையாலும்
அனைவருக்கும் துன்பங்கள்
கொடுக்கின்றான்.
ரிஷி, முனிவர்களின்
தவத்துக்கு
இடையூறு
விளைவிப்பதே அவனுக்குத்
தொழில். நேரடியாக
முடியாத
நேரங்களில்
அவனால்
ஏவப்படும்
இந்த
மாரீசனும் சுபாஹூவும்
வேலையைச்
செய்து
முடிப்பார்கள்.
இருவரும்
மிக்க வலிமை
பொருந்தியதோடு அல்லாமல்
வேண்டிய
உருவையும்
எடுப்பவர்கள்
எனச்
சொல்கின்றார்.
"என்ன,
ராவணனா?
என்னால்
கூட ஜெயிக்க
முடியாதவனாயிற்றே?
அவனை
எதிர்த்து
நிற்கும்
சக்தி எனக்கே இல்லை,
அப்படி
இருக்க
சிறுவனாகிய
ராமனால் என்ன
செய்ய
முடியும்?
அவனை
விட்டு
விடுங்கள்!"
என்று
கெஞ்சுகின்றான்.
முனிவர்
கோபம் கொண்டு
சொன்ன சொல்லை
மீறும்
உனக்கு
இதனால்
திருப்தி
ஆனால் சரி,
நான்
செல்கின்றேன்,
எனக்
கோபத்துடன்
திரும்ப
ஆரம்பிக்கவே
அண்டசராசரமும்
அவர்
கோபத்தால் நடுங்கியது.
வசிஷ்டர்
மன்னனுக்கு அறிவுரைகள்
சொல்லி மனதை
மாற்றி, விசுவாமித்திரருடன்
அனுப்பி
வைக்கின்றார். அனைவராலும்
ஆசீர்வதிக்கப்
பட்டு
வசிஷ்டரால்
காப்பு
மந்திரங்கள்
ஓதப்பட்டு விசுவாமித்திரருடன்
காட்டுக்குச்
செல்லும் ராமனை
லட்சுமணனும்
பின்
தொடருகின்றான். லட்சுமணனை
விசுவாமித்திரர்
கூப்பிடவில்லை
எனினும், வால்மீகி
சொல்வது
லட்சுமணனுடன் சேர்ந்து
ராமன்
செல்கின்றான்
என்பதே! இருவரும்
விசுவாமித்திரரைப்
பின்
தொடர்ந்து செல்வதை
வால்மீகி
ஈசனைப் பின்
தொடரும் கந்தன்
போலவும், பிரம்மனைப்
பின் தொடரும் அஸ்வினி
தேவர்கள்
போலவும் என
வர்ணிக்கின்றார்.
சரயூ நதியின்
தென்கரைக்கு
வந்த விசுவாமித்திரர்
ராமருக்குத்
தன் தவத்தினால்
பெறப்பட்ட
பசி, தாகத்தைப்
போக்கும் மந்திரங்கள்
ஆன "பலை, அதிபலை"
போன்றவற்றை
உபதேசிக்கின்றார்.
பின்னர் காலை எழுந்திருக்கும்
ராமனை
"கெளசல்யா
சுப்ரஜா ராமா!
பூர்வாஸந்த்யா
ப்ரவர்த்ததே!"
என்று ஆரம்பிக்கும்
ஸ்லோகத்தால்
எழுப்புகின்றார்.
(தற்சமயம்
வேங்கடேச
சுப்ரபாதத்தின் முதல்
ஸ்லோகமாக இது
விளங்குகின்றது)
பின்னர்
அங்கிருந்து
கிளம்பி ஸரயு நதியும்,
த்ரிபதகை
நதியும்
கலக்கும்
இடத்தில்
அமைந்திருந்த
விசுவாமித்திரரின் ஆசிரமத்துக்குச்
சென்று மற்ற
முனிவர்களைச்
சந்திக்கின்றார்கள்.
ஆசி பெற்றுக் கொள்கின்றனர்.
முனிவர்களுக்கு
இரு அரசகுமாரர்களும்
தாங்கள்
செய்யவேண்டிய
முறையான
மரியாதைகளையும்
செய்கின்றனர்.
பின்னர் மறுநாள்
காலை, தாடகை
என்னும்
அரக்கி
வசிக்கும்
காட்டிற்குக்
கூட்டிச்
செல்கின்றார்.
சுந்தன்
என்னும்
ராட்சசனைக் கணவனாய்க்
கொண்ட இவள்
மகனே மாரீசன்
என்றும், இந்த வனம்
செழிப்போடும்
வளத்தோடும் இருந்து
வந்ததாயும்
இப்போது
அதைத் தாடகியும்
அவள்
மக்களும்
நாசம்
செய்வதாயும் சொன்னார்.
இவள்
பூர்வாசிரமத்தில்
யக்ஷப்
பெண்ணாகவே
இருந்ததாயும்
அகஸ்தியரின் சாபத்தால்
ராட்சசியாக
மாறியதாகவும்
தெரிவிக்கின்றார்.
அந்தத்
தாடகையை ஒரு
பெண் என்று
தயங்காமல்
வதம்
செய்யவேண்டும்
எனவும்
சொல்கின்றார்.
தாடகை
வருவதைக்
கம்பர்
எப்படி
வர்ணிக்கின்றார்
என்று
பார்த்தோமானல்
அவளைப்
பற்றிப்
புரியும்.
"சிலம்புகள்
சிலம்பிடை
செறித்த
கழலோடும்
நிலம்
புக
மிதித்தனள்
நெளித்த
குழிவேலைச்
சலம்
புக அனல்
தறுகண்
அந்தகனும்
அஞ்சிப்
பிலம்
புக
நிலக்கிரிகள் பின்
தொடர
வந்தாள்"
(கம்பராமாயணம்
பால காண்டம் 369-ம் பாடல்)
"இறைக்கடை துடித்த
புருவத்தள்
எயிறு
என்னும்
பிறைக்கடை
பிறக்கிட
மடித்த பில வாயள்
மறைக்கடை
அரக்கி
வடவைக் கனல்
இரண்டு ஆய்
நிறைக்கடல்
முளைத்தென
நெருப்பு எழ
விழித்தாள்"(கம்ப
ராமாயணம் பால
காண்டம் 370-ம் பாடல்)
மலைகளை
உள்ளே
இருக்கும் பரல்களால்
ஆன
சிலம்புகளை
அணிந்த
கால்களினால்
பூமியை
அதிரும்படியாய்
மிதித்துக் கொண்டு,
அதனால்
பூமியில்
ஏற்படும்
குழிகளில்
நீர் பாயவும்,
எமனும் நடுங்கும்படியாகவும்,
எதற்கும்
அசையாதிருக்கும்
மலைகளும்,
அவள்
வரும்
வேகத்தால் இடம்
பெயரும்படியாகவும்
அங்கு
வருகின்றாளாம்
தாடகை.
மேலும்
நல்வழிகள்
பற்றிய
சிந்தனைகளே
அற்றவளாயும்,
கோபத்தால்
துடிக்கின்ற
புருவங்களுடனும்,
இரு
கோரப் பற்கள் வாயில்
வெளியே
பிறைச்
சந்திரர்
போல் தெரிகின்றதாயும்,
வாயைத்
திறந்தால்
எங்கே போய் முடியும்
எனத் தெரியாத
சுரங்கம்
போலவும் ,
கடலில்
தோன்றித்
தெரியும்
வடவாமுகாக்கினி போன்ற
நெருப்பு
விழிகளையும்
கொண்டு வருகின்றாளாம்
தாடகை.
இப்படிப்
பட்ட தாடகையைத்
தான் மிக்க
தயக்கத்துடனேயே
ராமர் தன்
பாணங்களால்
அவளுடன்
பெருத்த
யுத்தம்
செய்த
பின்னர் ஒரே
பாணத்தினால்
வதம் செய்தார்.
பின்னர்
விசுவாமித்திரரும்
தன் யாகத்தை
முறைப்படி
ஆரம்பிக்கும்
விரதம்
மேற்கொண்டார்.
**************************************************************************************
மன்னனும் பெரும்
வீரனும் ஆன
தசரதன் பல
நற்குணங்கள்
பெற்றிருந்தும்
அவன் ஆசை, பாசம், காதல்,
கோபம்,
காமம்,
அதனால்
விளையும்
துக்கம்
போன்றவை
நிரம்பியவனாகவே
காணப்படுகின்றான். தன்
மூத்த மகனை
அவன் பிரிய
மறுத்ததுக்கும்,
விசுவாமித்திரருடன்
அனுப்ப
மறுத்ததுக்கும்
காரணம் உண்டு.
இளைஞனாய் இருந்த
காலத்தில்
தசரதன்
காட்டில் வேட்டையாடிக்
கொண்டிருந்த
சமயம் மாலை
நேரமாகி
விடுகின்றது.
அப்போது
இருட்டில்
ஒரு நீர்த்துறைக்கு
அருகே காட்டு
மிருகம் என நினைத்துக்
குறி தவறாமல்
அம்பெய்யும்
தன் திறமையால்
அம்பெய்ய,
அம்பு
பட்டதோ ஒரு
மனிதன் மீது.
பதறிப்போன தசரதன்
அங்கேபோய்ப் பார்க்க
அம்பினால்
வீழ்ந்து
கிடப்பதோ ஒரு முனிகுமாரன்.
"ஸ்ரவணகுமாரன்"என்னும்
பெயர் உள்ள
அந்தப் பையன்,
கண்
தெரியாத, வயதான தன்
பெற்றோர்களைக்
காப்பாற்றி
வந்தான்.
அவர்களின்
தாகம் தீர்க்கவே
தண்ணீர்த்
துறைக்கு
அவ்வேளையில்
நீர் எடுக்க
வந்ததாயும்,
தசரதனின்
அம்பால்
வீழ்ந்து
விட்டதையும்
தெரிவித்துத்
தன் பெற்றோர்
தாகத்துடன் இருப்பார்கள்
எனவும் போய்
அவர்களின்
தாகத்தைத்
தீர்த்து
விடு எனவும்
சொல்லிவிட்டு இறக்கின்றான்.
அவன்
பெற்றோர்களை
மிகுந்த தயக்கத்துடனும்,
பயத்துடனும்
சென்று
சந்திக்கும்
தசரதனைத் தன்
மகன் இல்லை
எனவும், தன்
மகனைக்
கொன்றவன்
அவனே எனவும் அறிந்து
கொள்ளும்
அந்தத்
தம்பதிகள்
தசரதனும்
அவ்வாறே
புத்ர
சோகத்தால்
இறக்கவேண்டும் எனச்
சாபம்
கொடுத்துவிட்டு
இறந்து
விடுகின்றனர்.
அதை நினைத்தே
இப்போது
விசுவாமித்திரரிடம்
தன் மகனை
அனுப்பத் தசரதன்
தயங்கினாலும்,
பின்னால்
ஒரு நாள் அது நடந்தே
தீருகின்றது.
இது தான் விதி,
என்றும்
காரண காரியம்
இல்லாமல்
எதுவும்
நடக்காது
என்பதையும்
புரிய
வைக்கின்றது.
ஏற்கெனவே
தீர்மானிக்கப்
பட்ட ஒன்று,
அதனதன் காலத்தில்
சற்றும் வழுவாமல்
அப்படியே
நடக்கின்றது.
அதற்குச் சாட்சி
அந்தக் காலம் என்ற
ஒன்றே ஆகும்.